{சவுலின் மரணத்தை தாவீது அறிதல்} [PS] சவுல் இறந்தபின்பு, தாவீது அமலேக்கியர்களை முறியடித்து, சிக்லாகு பட்டணத்துக்குத் திரும்பிவந்து, இரண்டு நாட்கள் அங்கே இருந்த பின்பு,
மூன்றாம் நாளிலே ஒரு மனிதன் சவுலின் முகாமிலிருந்து புறப்பட்டு, தன்னுடைய ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, தன்னுடைய தலையின்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டு, தாவீதிடம் வந்து, தரையிலே விழுந்து வணங்கினான்.
தாவீது அவனைப் பார்த்து: நடந்த செய்தி என்ன? சொல் என்று கேட்டதற்கு, அவன்: மக்கள் யுத்தத்தைவிட்டு ஓடிப்போனார்கள்; மக்களில் அநேகம் பேர் காயப்பட்டு இறந்துபோனார்கள்; சவுலும் அவருடைய மகனான யோனத்தானும் இறந்தார்கள் என்றான்.
அந்த வாலிபன்: நான் தற்செயலாகக் கில்போவா மலைக்குப் போனேன்; அப்பொழுது இதோ, சவுல் தம்முடைய ஈட்டியின்மேல் சாய்ந்துகிடந்தார்; இரதங்களும் குதிரை வீரர்களும் அவரைப் பின்தொடர்ந்து நெருங்கினார்கள்.
அப்பொழுது நான், அவர் விழுந்த பின்பு பிழைக்கமாட்டார் என்று நிச்சயித்து, அவருக்கு அருகில் போய் நின்று, அவரைக் கொன்றுபோட்டேன்; பின்பு அவருடைய தலையின்மேல் இருந்த கிரீடத்தையும் அவருடைய கையில் இருந்த காப்பையும் எடுத்துக்கொண்டு, அவைகளை இங்கே என்னுடைய ஆண்டவனிடம் கொண்டுவந்தேன் என்றான்.
தாவீது அதைத் தனக்கு அறிவித்த வாலிபனைப் பார்த்து: நீ எந்த இடத்தைச் சேர்ந்தவன் என்று கேட்டதற்கு, அவன்: நான் அந்நிய தேசத்தானுடைய மகன், நான் அமலேக்கியன் என்றான்.
(வில்வித்தையை யூதாவின் மகன்களுக்குக் கற்றுக்கொடுக்கும்படிக் கட்டளையிட்டான்; அது யாசேரின் புத்தகத்தில் [* வேதாகமத்தில் இந்த புத்தகம் குறிக்கப்பட்டிருக்கிறது [BR] இது யூதர்களின் இப்போது கிடைக்க கூடிய ஒரு சரித்திர புத்தகம் இதில் பழங்காலத்து யுத்தத்தின் துயரப்பாடல்களின் சேகரிப்பாகும் [BR] யோசுவா 10:13,] எழுதியிருக்கிறது) அவன் பாடின துயரப்பாடலாவது. [QBR]
உயிரோடு இருக்கும்போது சவுலும் யோனத்தானும் ஒருவருக்கு ஒருவர் அன்பு காட்டி மகிழ்ச்சியாக இருந்தார்கள்; [QBR] மரணத்திலும் பிரிந்துபோனதில்லை; கழுகுகளைவிட வேகமும், [QBR] சிங்கங்களைவிட பலமும் உள்ளவர்களாக இருந்தார்கள். [QBR]
என்னுடைய சகோதரனான யோனத்தானே, [QBR] உனக்காக நான் துயரப்படுகிறேன்; [QBR] நீ எனக்கு மிகவும் இன்பமாக இருந்தாய்; [QBR] உன்னுடைய அன்பு ஆச்சரியமாக இருந்தது; [QBR] பெண்களின் அன்பை விட அதிகமாக இருந்தது. [QBR]